Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சியில் தாயின் 3-வது கணவனை ஓட ஓட விரட்டி கொன்ற மகன் மற்றும் 17 வயது சிறுவன் கைது .

0

 

திருச்சியில் நள்ளிரவில் பயங்கரம்:

தாயின் 3–வது கணவரை ஓட, ஓட விரட்டி குத்தி கொன்ற மகன் மற்றும் 17 வயது சிறுவன் கைது .

திருச்சி இ.பி.ரோடு, கருவாட்டு பேட்டையை சேர்ந்தவர். மாரிமுத்து இவரது மகன் பரணிகுமார் (வயது 26). சரித்திர பதிவேடு குற்றவாளியான பரணிகுமார் மீது கோட்டை காவல் நிலையம், காந்தி மார்க்கெட் உள்ளிட்ட காவல் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.
ஒரு வழக்கில் ஒன்றில் சிக்கி சிறையில் தண்டனை அனுபவித்த பரணிகுமார் கடந்த மாதம் சிறையில் இருந்து திரும்பினார்.

இந்த நிலையில் திருச்சி கோட்டை ரெயில்வே ஸ்டேசன் ரோடு குட்ஷெட் பிளாட்பாரம் பகுதியில் வசித்து வரும் ஜோதி (வயது 35) என்ற பெண்ணுடன் பரணிகுமாருக்கு பழக்கம் ஏற்பட்டு இது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது.
ஏற்கனவே 2 முறை திருமணம் செய்திருந்ததாக கூறப்படும் ஜோதியை பரணிகுமார் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு 3–வது திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

தினமும் ஜோதியை சந்திக்கும் பரணிகுமார் குடிபோதையில் அவருடன் அடிக்கடி தகராறிலும் ஈடுபட்டு வந்துள்ளார்.
இந்நிலையில் நேற்று இரவு குடிபோதையில் கோட்டை ஸ்டேசன் பகுதியில் உள்ள ஜோதியின் வீட்டிற்கு நேற்று நள்ளிரவு சுமார் 11.30 மணிக்கு வந்த பரணிகுமார் அவரிடம் தகராறில் ஈடுபட்டு அவரை கையால் தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இதற்கிடையில் ஜோதியின் மகன் மாதேஷ் (வயது 17) மற்றும் அவரது நண்பர் பாலக்கரையை சேர்ந்த டோலு (எ) முகமது ரபிக் ஒரு வழக்கு விசாரணை தொடர்பாக காந்தி மார்க்கெட் காவல் நிலையத்திற்கு சென்று விட்டு வீடு திரும்பினார். அப்போது வீட்டிற்கு முன்பு பரணிகுமார் தனது தாய் ஜோதியிடம் தகராறில் ஈடுபட்டதை கண்ட மாதேசும் அவரது நண்பரும் சேர்ந்து பரணிகுமாரை கல்லால் தாக்கி கத்தியால் குத்தினர்.
இதில் ரத்தம் வழிந்த நிலையில் உயிர் தப்பித்த பரணிகுமார் கோட்டை ஸ்டேசன் பகுதியில் இருந்து ஆர்.ஆர்.சபா பகுதியை நோக்கி ஓடினார். அவரை மாதேசும், அவரது நண்பரும் தொடர்ந்து விரட்டி சென்று பொது நூலகம் அருகே மீண்டும் அவரை கத்தியால் குத்தினர். இதில் சம்பவ இடத்திலேயே பரணிகுமார் துடிதுடித்து உயிரிழந்தார். இதையடுத்து மாதேசும், அவரது நண்பரும் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.
தகவலை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கோட்டை காவல் நிலைய போலீசார் அங்கு ரத்த வெள்ளத்தில் கிடந்த பரணிகுமார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தப்பி ஓடிய இருவரையும் கைது செய்தனர்.

.இதற்கிடையே இந்த கொலை சம்பவம் தொடர்பாக ஜோதியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நள்ளிரவில் வாலிபர் ஓட ஓட விரட்டி வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் திருச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Leave A Reply

Your email address will not be published.