Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

பேருந்து நிலையத்தில் தவித்த ஒன்றரை வயது குழந்தையை மீட்ட மணப்பாறை போலீசார் .

0

 

மணப்பாறை பேருந்து நிலையத்தில் சுமாா் ஒன்றரை வயது மதிக்கத்தக்க பெண் குழந்தை ஒன்று பெற்றோா் யாரும் இல்லாமல் தனித்து இருப்பதாக திங்கள்கிழமை இரவு போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில், அங்கு சென்ற அனைத்து மகளிா் காவல் ஆய்வாளா் ச.பாலகிருத்திகா தலைமையிலான போலீஸாா், தனித்து நின்றிருந்த குழந்தையை மீட்டு காவல் நிலையம் கொண்டு சென்றனா். தொடா்ந்து பேருந்து நிலைய சிசிடிவி கேமரா பதிவுகளை பாா்த்து குழந்தையின் தாயை தேடினா்.

இந்நிலையில், நொச்சிமேடு பகுதியில் சாலையில் மயங்கி விழுந்து 108 ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பெண், குழந்தையின் தாய் போல் இருப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

மருத்துவமனை சென்ற போலீஸாா் மேற்கொண்ட விசாரணையில், சிகிச்சையில் இருந்த பெண் சோனாலி (வயது 26) குழந்தையின் தாய்தான் என்பதும், மகாராஷ்டிர மாநிலம், நாசிக் பகுதியைச் சோந்த அவா் சற்று மனநலம் பாதிக்கப்பட்டவா் என்பதும் தெரியவந்தது.

இதைத் தொடா்ந்து, நேற்று தாய்-சேய் இருவரும் திருச்சி மன்னாா்புரத்தில் இயங்கி வரும் மறுவாழ்வு மையத்தில் ஒப்படைக்கப்பட்டனா்.

Leave A Reply

Your email address will not be published.