திருச்சியில் அதிமுக தில்லைநகர் பகுதி சார்பில் அண்ணா பிறந்தநாள் விழா மற்றும் மதுரை மாநாடு தீர்மான விளக்க பொதுக்கூட்டம்.
திருச்சி மாநகர் மாவட்ட
அதிமுக சார்பில்
பீமநகரில் பொதுக்கூட்டம்.
பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் விழா மற்றும் மதுரை அதிமுக பொன்விழா மாநாடு தீர்மான விளக்க பொதுக்கூட்டம் திருச்சி மாநகர் மாவட்டம் மேற்கு சட்டமன்ற தொகுதி தில்லை நகர் பகுதி சார்பில் திருச்சி பீமநகரில் பகுதி செயலாளர் எம்.ஆர்.ஆர்.முஸ்தபா தலைமையில் நடந்தது.
மாவட்ட துணைச் செயலாளர் பத்மநாதன், பகுதி செயலாளர்கள் என்.எஸ்.பூபதி, நாகநாதர் பாண்டி, கலைவாணன், பொதுக்குழு உறுப்பினர் வெல்லமண்டி பெருமாள் ஆகியோர் வரவேற்று பேசினர். கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் ஜெயபால், அமைப்புச் செயலாளர் ரத்தினவேல், மாநில எம்.ஜி.ஆர். இளைஞர் அணி செயலாளர் சீனிவாசன், முன்னாள் எம்.எல்.ஏ பூவைசெழியன், முன்னாள் அரசு தலைமை கொறடா மனோகரன், முன்னாள் அமைச்சர் நல்லுசாமி,
மாணவரணி மாவட்ட செயலாளர் கார்த்திகேயன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
கூட்டத்தில் எம்ஜிஆர் இளைஞர் அணி மாவட்ட செயலாளர் முத்துக்குமார்,
பகுதி செயலாளர்கள் அன்பழகன், சுரேஷ்குப்தா. ஏர்போர்ட் விஜி, கிருஷாந்த். கவுன்சிலர்கள் கோ.கு.அம்பிகாபதி, அரவிந்தன், முன்னாள் கோட்டத் தலைவர் ஞானசேகர்,டிபன் கடை கார்த்திகேயன்
,இன்ஜினியர் இப்ராம்ஷா எம்.ஜே.பி வெஸ்லி, வாழைக்காய் மண்டி சுரேஷ், கருமண்டபம் சுரேந்தர், உடையான்பட்டி செல்வம், பாலக்கரை ரவீந்திரன் , ஷாஜஹான், ஹாருண் , பொன்னர், சிந்தை ராமச்சந்திரன், ரமணிலால், உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
முடிவில் வட்ட செயலாளர் சீனிவாசன், பகுதி தலைவர் அக்பர் அலி, வட்டச் செயலாளர்கள் செல்வகுமார், வெல்லமண்டி கன்னியப்பன் ஆகியோர் நன்றி கூறினர்.