Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி: கள்ளத்தொடர்பு குறித்து மனைவி போலீசில் புகார் அளித்ததால் கணவன் தற்கொலை.

0

கள்ளத்தொடர்பு குறித்து
மனைவி போலீசில் புகார் அளித்ததால் கணவன் தற்கொலை.

திருச்சி பாலக்கரை முதலியார் சத்திரம் நடுத்தெரு பகுதியைச் சேர்ந்தவர் மகேந்திரன் (வயது 39). இவருக்கு திருமணமாகி ராணி என்ற மனைவி உள்ளார். இந்த நிலையில் மகேந்திரனுக்கு தமது உறவு பெண் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. இது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இதை அறிந்து அதிர்ச்சி அடைந்த ராணி கடந்த சில தினங்களுக்கு முன்பு தனது கணவர் மீது கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

பின்னர் ராணி கணவரை பிரிந்து தனது தாய் வீட்டுக்கு சென்று விட்டார். இந்த நிலையில் மிகுந்த மன அழுத்தத்திற்கு ஆளான மகேந்திரன் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பேன் கொக்கியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து ராணி பாலக்கரை போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.