திருச்சி அதிமுக புறநகர் தெற்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ப.குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
அஇஅதிமுக பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமியின் ஆணைக்கிணங்க…
பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் அவர்களின் 1348.வது சதய விழாவினை முன்னிட்டு திருச்சி மாவட்ட அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பில்
திருச்சி ஒத்தக்கடை ரவுண்டானாவில் உள்ள, பேரரசர் பெரும்பிடுகு முத்தரையரின் திருவுருவ சிலைக்கு.
நாளை 23.5.2023 காலை 09.30 மணியளவில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படவுள்ளது.
இந்த நிகழ்வில் மாவட்ட கழக நிர்வாகிகள், ஒன்றிய, நகர, பகுதி, பேரூர், கழக நிர்வாகிகள் மற்றும் கழகத்தின் அனைத்து நிலைகள் உள்ள சார்பு அணி நிர்வாகிகளும், செயல்வீரர்களும், வீராங்கனைகளும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
என ப. குமார் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.