Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

இனிவரும் பொங்கல் தான் எங்களுக்கு உண்மையான பொங்கல் தமிழ்நாடு ஜல்லிக்கட்டு பாதுகாப்பு நல சங்க தலைவர் ஒண்டிராஜ்.

0

 

திருச்சியில் ஜல்லிக்கட்டுக்கு தடை இல்லை உச்ச நீதிமன்றம் தீர்ப்பு – ஜல்லிக்கட்டு பாதுகாப்பு நல சங்கத்தின் தலைவர் ஒன்டிராஜ் தலைமையில் கொண்டாட்டம்.

பல நூற்றாண்டு காலமாக தமிழர்கள் ஜல்லிக்கட்டு போட்டியை பாரம்பரியமாக விளையாடி வருகின்றன. இந்த ஜல்லிக்கட்டானது ஆண்டுதோறும் தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையையொட்டி தமிழகம் முழுவதும் நடத்தப்படும்.

தமிழர்களின் வீர விளையாட்டாக ஜல்லிக்கட்டு இருந்து வரும் நிலையில், இந்த போட்டிகளின்போது காளைகள் துன்புறுத்தப்படுவதாக கூறி விலங்குகள் நல அமைப்பான பீட்டா வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த தடை விதித்து கடந்த 2014ஆம் ஆண்டு உத்தரவிட்டது.

இதனை அடுத்து, ஜல்லிக்கட்டு போட்டிக்கு தடை விதிக்கப்பட்டதை அடுத்து, தமிழ்நாடு முழுவதும் 2017ஆம் ஆண்டு இளைஞர்கள் ஒன்று திரண்டு மாபெரும் போராட்டம் நடத்தியது பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

பேராட்டத்தை அடுத்து, அப்போதைய முதல்வர் பன்னீர்செல்வம் ஜல்லிக்கட்டு போட்டி தொடர்பாக அவசர சட்டம் கொண்டு வந்தார். அதைத் தொடர்ந்து 2017ஆம் ஆண்டு விலங்குகள் வதைத் தடுப்பு சட்டம் என்ற பெயரில் நிரந்தரச் சட்டம் இயற்றப்பட்டது. இதன் அடிப்படையில் தமிழ்நாட்டில் தொடர்ந்து ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்பட்டு வருகிறது.

ஆனாலும் பீட்டா உள்ளிட்ட அமைப்புகள் ஜல்லிக்கட்டு போட்டியை தடை செய்ய தொடர்ந்து முயற்சி செய்தது.

இந்த வழக்கில் உச்சநீதிமன்றத்தில் விவாதங்களும் நடைபெற்றன. ஜல்லிக்கட்டுக்கு தடை கோரி பீட்டா அமைப்புகள் முன்வைத்த பல வாதங்களை நீதிபதிகள் நிராகரித்தனர்.

உச்சநீதிமன்றத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இறுதி வாதங்கள் நடைபெற்றன. அப்போது, பீட்டா தரப்பில், ”நாங்கள் 5ஆண்டுகளாக ஆய்வு செய்து சேகரித்த தரவுகளைத்தான் தாக்கல் செய்திருக்கிறோம். எந்த ஒரு காளையும் ஜல்லிக்கட்டில் ஓட விரும்புவது இல்லை என்றும் இது ஒரு கொடூரமான விளையாட்டு என்றும் ஜல்லிக்கட்டில் காளைகள் கட்டாயமாக ஓட விடப்படுகின்றன” என்றும் பல வாதங்கள் முன்வைக்கப்பட்டன.
ஜல்லிக்கட்டு போட்டிகள் தமிழகத்தின் கலாச்சார நிகழ்ச்சி என்றும், ஜல்லிக்கட்டில் காளைகளுக்கு எந்த கொடுமையும் இழக்கப்படுவதில்லை. ஜல்லிக்கட்டு என்பது வெறும் பொழுதுபோக்கு, கேளிக்கை அல்ல. வரலாற்று, கலாச்சார வாய்ந்த நிகழ்வு என்று என்று தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வாதாடியது.

இவ்வாறாக அனைத்து தரப்பு வாதங்களும் நடத்து முடிந்து, தீர்ப்பு மட்டும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டிருந்தது நிலையில் இன்று நீதிபதிகள் கே.எம்.ஜோசப், அஜய் ரஸ்தோகி, அனிருத்தா போஸ், ரிஷிகேஷ் ராய், சி.வி ரவிக்குமார் ஆகியோர் அடங்கிய 5நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு இன்று தீர்ப்பை அறிவித்தது.
இன்று நடைபெற்ற இறுதி விசாரணையில் ஜல்லிக்கட்டு என்பது கலாச்சாரம் சார்ந்தது எனவே அதில் உச்சநீதிமன்றம் தலையிடாது மேலும் தமிழக அரசு குடியரசு தலைவரின் ஒப்புதல் பெற்று ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான அவசர சட்டத்தை நிறைவேற்றியுள்ளது செல்லும்,

இனி தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த எந்தவித தடையும் இல்லை எனக் கூறி தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்புக்கு வரவேற்பு அளிக்கும் விதமாக திருச்சி மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு பாதுகாப்பு நல சங்கத்தின் சார்பில் நிர்வாகிகள் வெடி வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடினார்கள்.

மேலும் இது குறித்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய ஜல்லிக்கட்டு பாதுகாப்பு நல சங்கத்தின் தலைவர் ஒன்டிராஜ் இந்த தீர்ப்பு எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிப்பதாகவும் தமிழர்களின் உணர்வுக்கு மதிப்பளித்து இந்த தீர்ப்பு வழங்கப்பட்டதாகவும் கூறினார்கள். மேலும் தமிழக அரசு நியமித்த வழக்கறிஞர் மேலும் தமிழக அரசு தொடர்ந்து முயற்சி செய்து உச்சநீதிமன்றம் இந்த தீர்ப்பு வழங்குவதற்கு உறுதுணையாக செயல்பட்டுள்ளது. எனவே, தமிழக அரசுக்கு நாங்கள் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். இனி ஜல்லிக்கட்டுக்கு எதிராக எந்த ஒரு வழக்குகளும் வராது என்று நாங்கள் நம்புகிறோம் நாங்கள் வருடம் தோறும் கொண்டாடி வரும் பொங்கல் பண்டிகை உண்மையான பொங்கல் பண்டிகை இல்லை தற்போது வந்துள்ள இந்த ஜல்லிக்கட்டு தீர்ப்பு தான் எங்களுக்கு உண்மையான பொங்கல் பண்டியாக நாங்கள் கருதுகிறோம் என்று தெரிவித்தனர்.

Leave A Reply

Your email address will not be published.