திருச்சி
மதுபான கடை அருகே சாக்கடையில் வாலிபரின் பிணம். போலீசார் விசாரணை.
திருச்சி பொன்மலையில் மதுபான கடை அருகே சாக்கடையில் வாலிபர் பிணமாக கிடந்தார். உடலை மீட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இச்சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-
திருச்சி பொன்மலை மிலிட்டரி காலனி பகுதியைச் சேர்ந்தவர் லோகநாதன் (வயது 38) இவர் எந்த வேலைக்கும் செல்லாமல் இருந்தார்.
இதற்கிடையே
குடிப் பழக்கத்திற்கும் ஆளானார். இந்த நிலையில் அப்பகுதியில் உள்ள டாஸ்மாக் கடை ஒன்றில் நேற்று இரவு மது அருந்திவிட்டு அருகில் உள்ள சாக்கடை அருகே ஒரு லிட்டில் அமர்ந்திருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக லோகநாதன் கழிவு நீர்சாக்கடைக்குள் தவறி விழுந்ததாக கூறப்படுகிறது. இன்று காலையில் அப்பகுதியில் சென்ற பொதுமக்கள் லோகநாதன் பிணமாக கிடப்பதை பார்த்து போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் பொன்மலை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அவர் சாக்கடைக்குள் விழுந்ததில் மூச்சுத் திணறு இறந்தாரா? அல்லது எப்படி இறந்தார் ?என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.