பெண்களின் சுய பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வு வாக்கத்தான் நிகழ்ச்சி திருச்சியில் நடைபெற்றது.
திருச்சியில் Rehabindia சாரிட்டபிள் டிரஸ்ட்,முகேஷ் ஆர்த்தோ கேர் மருத்துவமனை மற்றும் திருச்சி மாவட்ட காவல்துறை இணைந்து பெண்களின் பாதுகாப்பு காவல் உதவி ஆப் பற்றிய விழிப்புணர்வுக்காண நடை பயணம் (வாக்கத்தான்) நிகழ்ச்சி திருச்சி தலைமை தபால் நிலையம் அருகில் இருந்து தொடங்கி அண்ணா விளையாட்டரங்கில் நிறைவு பெற்றது.
இந்நிகழ்வில் 600க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
இந்த நிகழ்ச்சியை Rehabindia சாரிட்டபுள் ட்ரஸ்டி கே.என்.சக்திவேல்,முகேஷ் ஆர்த்தோ கேர் மருத்துவமனை நிர்வாக இயக்குனர் முகேஷ் மோகன், இந்தியன் மெடிக்கல் அசோசியேஷன் நிர்வாகிகள் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.