திருச்சி மாவட்ட வியாபார கழகம் சார்பில் வணிகர் தின விழா

கொடியேற்றி இனிப்பு வழங்கப்பட்டது
திருச்சி மாவட்ட வியாபார கழகம் சார்பில் திருச்சி மாவட்ட வியாபாரக் கழகத்தில் மே 5-ந் தேதி வணிகர் தினத்தை முன்னிட்டு வணிகர் தின விழா நடைபெற்றது.வியாபார கழக தலைவர் ஜே.ஜே.எல். ஞானராஜ், வாழ்த்துத் தெரிவித்து சிறப்பித்தார்.
நிகழ்ச்சிக்கு வந்திருந்த அனைவரையும் செயலாளர் அ. ஜார்ஜ் ராய் வரவேற்று பேசினார். துணைத் தலைவர், ஞா.ரேன்சன் தாமஸ் ஆரோக்கியராஜ் தலைமையில் வணிகர் தின கொடியேற்றி இனிப்புகள் வழங்கப்பட்டது. இணைச் செயலாளர் டி.சீத்தாராமன் உதவிச் செயலாளர் பா.பத்திநாதன் மற்றும் நிர்வாகக் குழு உறுப்பினர்கள் அ.பாலசுப்பிரமணியன், சி.பி.சிங்காரவேல், ப,மாரிமுத்து, துளசி.கே.பாலசுப்பிரமணியன், ப,மகாலிங்கம், பிஎல்.சுப்பையா, கே.பாலகிருஷ்ணன்ராவ், என். கே.சக்கரவர்த்தி, என்.கே.இஸ்மாயில்கான் மற்றும் பலர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

