அண்ணாவின் 54 ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு திமுக தெற்கு மாவட்டம் சார்பில் மவுன ஊர்வலம்.அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி அறிக்கை.
திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க சார்பாக
அண்ணாவின்
54-ம்ஆண்டு நினைவு மவுன ஊர்வலம்
அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிக்கை.
திருச்சி தெற்குமாவட்ட தி.மு.க. செயலாளரும், பள்ளிக்கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
பேரறிஞர் அண்ணாவின் 54 -ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி, நாளை (3-ந் தேதி)காலை 7.15 மணி அளவில் திமுக. முதன்மைச் செயலாளரும் , நகர்ப்புற வளர்ச்சிதுறை அமைச்சருமான
கே. என். நேரு தலைமையில்
வி.என்.நகரில் அமைந்துள்ள திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க. அலுவலகத்தில் இருந்து சிந்தாமணியில் உள்ள அண்ணா சிலைக்கு மவுன ஊர்வலமாகச் சென்று பேரறிஞர் அண்ணாவின் உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படுகிறது.
இந்நிகழ்வில் மாநில, மாவட்ட,மாநகர , பகுதி, ஒன்றிய, நகர, பேரூர், வார்டு, கிளை கழக செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் அனைத்து அணிகளின் அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்கள் அனைத்து உள்ளாட்சி பிரதிநிதிகள் கழக முன்னோடிகள் மற்றும் தொண்டர்கள் கலந்துகொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.