எம்ஜிஆர் இளைஞர் அணி இணைச்செயலாளரும்.முன்னாள் துணை மேருமான ஜெ.சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
மறைந்த தமிழக முதல்வர்கள் எம்ஜிஆர்,ஜெயலலிதா ஆகியோரின் வழியில் தமிழக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் ஆணைக்கிணங்க
பேரறிஞர் அண்ணாவின் 54 ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி நாளை காலை 10.05 மணி அளவில் திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் சிந்தாமணி அருகில் அமைந்துள்ள அண்ணாவின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட உள்ளது.
அது சமயம் கவுன்சிலர்கள், மாவட்ட நிர்வாகிகள். பொதுக்குழு உறுப்பினர்கள், பகுதி செயலாளர்கள்.நிர்வாகிகள் மாவட்ட சார்பு அணி நிர்வாகிகள், வட்ட செயலாளர்கள், நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அனைவரும் திரளாக கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
என தனது அறிக்கையில் கூறியுள்ளார்.