திருச்சி தெற்கு மாவட்டம் திருவெறும்பூர் தொகுதியில் மாநகர கிராம சபை கூட்டம் அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டார்.
திருச்சி தெற்கு மாவட்டம் திருவெறும்பூர் தொகுதியில் மாநகர சபை , கிராமசபை கூட்டம்.
மாவட்டச் செயலாளரும் பள்ளிக் கல்வித் துறை அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி பங்கேற்பு.
தமிழக முதல்வர் அவர்களின் அறிவுறுத்தலின்படி, திருச்சி தெற்கு மாவட்டத்தில் நவம்பர் 1ல் மாநகர சபை மற்றும் கிராம சபை கூட்டம் பொன்மலை மண்டலம் 3 வார்டு எண் 46 இல் நடைபெற்றது .
இந்த கூட்டத்தில் மாவட்டச் செயலாளரும் பள்ளிக்கல்வித்துறை
அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் கலந்து கொண்டார்.
இந்நிகழ்வில் மாநகராட்சி ஆணையர்,
திருச்சி திமுக மாநகர செயலாளரும் மண்டலம் மூன்றின் தலைவருமான மு.மதிவாணன்,
பொன்மலை பகுதி செயலாளரும்,
திருச்சி மாநகராட்சி நகர அமைப்பு குழு தலைவருமான கொட்டப்பட்டு இ.எம்.தர்மராஜ் மாமன்ற உறுப்பினர் ரமேஷ் ஆகியோரும் மற்றும் அரசு உயர் அலுவலர்களும், பொதுமக்களும் கலந்து கொண்டு தங்கள் பகுதியில் உள்ள பிரச்சனைகள் சம்பந்தமாகவும் தங்களது தனிப்பட்ட பிரச்சனைகள் சம்பந்தமாகவும் மனுக்களை அமைச்சரிடமும், மாநகராட்சி ஆணையரிடமும் வழங்கினார்.