
திருச்சியில் கூடுதல் குடும்ப நல நீதிமன்ற திறப்பு விழா.
திருச்சி மாவட்டத்தில் கூடுதல் குடும்ப நல நீதிமன்ற திறப்பு விழா மாண்புமிகு தலைமை நீதிபதி சுஷ்ரீத் அரவிந்த் தர்மாதிகாரி அவர்கள் காணொளி மூலமாக திறந்து வைத்தார்.
விழாவில் மாண்புமிகு மாவட்ட நீதிபதி M. கிறிஸ்டோபர் அவர்கள் வரவேற்பு உரை வழங்கினார்.
நிகழ்ச்சியில் திருச்சி மாவட்ட போர்ட் போலியோ நீதி அரசர் உயர் நீதிமன்ற நீதிபதி D.. ஜெகதீஷ் சந்திரா, மாண்புமிகு உயர் நீதிமன்ற நீதிபதி S. ஸ்ரீமதி, திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதிக் டாயல், மாவட்ட காவல்துறை ஆணையர்
N. காமினி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் டோங்ரேய் பிரவீன், மாநகராட்சி ஆணையர் விர் பிரதாப் சிங் திருச்சிராப்பள்ளி வழக்கறிஞர் சங்க தலைவர் 
S.பாலசுப்ரமணியன் செயலாளர் ஆரோக்கியசாமி நிர்வாகிகள் கண்ணன்,சுதா ராஜா ரவிவர்மா,பிரதீப் குற்றவியல் வழக்கறிஞர் சங்க தலைவர் P. சுரேஷ், துணைத் தலைவர்கள் சசிகுமார், பிரபு செயலாளர், பெண் இணைச்செயலாளர் அனுசியா,
P. V.வெங்கட் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள், மூத்த வழக்கறிஞர்கள், முசிறி, தொட்டியம், மணப்பாறை, லால்குடி வழக்கறிஞர் சங்க நிர்வாகிகள் நீதிமன்ற ஊழியர்கள் என 700 க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் நிறைவில் தலைமை குற்றவியல் நீதிபதி N. செந்தில் முரளி நன்றியுரை ஆற்றினார்.

