Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

உடல் உறுப்பு தானம் செய்த குழமூர் விவசாயி குடும்பத்தினரை நேரில் சந்தித்து வாழ்த்திய திருச்சி மக்கள் சக்தி இயக்கத்தினர்.

0

உடல் உறுப்புதானம் செய்த குழுமூர் விவசாயி குடும்பத்தினரை திருச்சி மக்கள் சக்தி இயக்கம் சந்தித்து பாரட்டினர்.

அரியலூர் மாவட்டம் செந்துறை தாலுக்கா குழுமூர் கிராமத்தை சேர்ந்த விவசாயி இளங்கோவன் கடந்த ஏப்ரல் 4 ந்தேதி ஏற்பட்ட விபத்தை தொடர்ந்து அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தபோது ஏப்ரல் 7 ந்தேதி மூளை சாவு ஏற்பட்டதை தொடர்ந்து

இளங்கோவன் குடும்பத்தினர் உடல் உறுப்பு தானம் செய்ய முன் வந்தனர்.

இதையடுத்து திருச்சி மகாத்மா காந்தி அரசு பொது மருத்துவமனையில் இளங்கோவனின் உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டது.

இந்நிகழ்வை அறிந்த திருச்சி மக்கள் சக்தி இயக்கத்தினர் இன்று மே 1 ந்தேதி மாநில பொருளாலர் கே.சி.நீலமேகம், மாநில துணை பொதுசெயலாளர் பேரா.சந்திரசேகர், மணப்பாறை திருக்குறள் புலவர் நாவை.சிவம் உள்ளிட்டவர்கள் குழுமூர் கிராமத்தில் உள்ள இளங்கோவன் குடும்பத்தினரை நேரில் சந்தித்து பாராட்டு சான்று வழங்கி, ரூ.11000 நிதியளித்தனர்.

தந்தையின் உடல் உறுப்பு தான நிகழ்வை கண்டு வெகு தொலைவில் இருந்து வந்து பாராட்டிய மக்கள் சக்தி இயக்க தோழர்களுக்கு இளங்கோவன் குடும்பத்தினர் நெகிழ்ச்சியோடு நன்றி தெரிவித்தனர்.

Leave A Reply

Your email address will not be published.