Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சியில் +2 மாணவி மற்றும் காப்பக சிறுமி திடீர் மாயம்.

0

'- Advertisement -

திருச்சி இது வேறு சம்பவங்களில்

பிளஸ்-2 மாணவி,காப்பக சிறுமி திடீர் மாயம்.

திருச்சி கீழ பஞ்சப்பூர் தெற்கு தெருவை சேர்ந்தவர் சிதம்பரம். இவரது மகள் மாதவி. (வயது 17). திருச்சி கன்டோன்மென்ட் பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் 12-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் நேற்று வீட்டை விட்டு வெளியே வந்த மாதவி மீண்டும் வீடு திரும்பவில்லை.

இதுகுறித்து அவரது தாய் கருப்பாயி எடமலைப்பட்டி புதூர் போலீசில் புகார் செய்தார். புகாரின்பேரில் இன்ஸ்பெக்டர் காவேரி வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.

Suresh

*மற்றொரு சம்பவம்*

இதேபோல் திருச்சி கோட்டை போலீஸ் சரகம் வி.என். நகரில் காப்பகம் ஒன்று உள்ளது.

இந்த காப்பகத்தில் நாகை பாலக்குறிச்சி கீழ தோப்பு பகுதியைச் சேர்ந்த மகாலிங்கம் மகள் ஆனந்தி (வயது 17) என்பவர் இருந்து உள்ளார். சம்பவத்தன்று வெளியே வந்த அவர் மீண்டும் காப்பகத்துக்கு திரும்ப வில்லை.

இது குறித்து காப்பக கண்காணிப்பு அலுவலர் ஆல்பர்ட் கோட்டை போலீசில் புகார் கொடுத்தார்.

புகாரின்பேரில் போலீசார் வழக்குப் பதிந்து காணாமல் போன சிறுமியை தேடி வருகின்றனர்
.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.