அகில இந்திய அளவில் கவியரங்கம்,திருச்சியில் நடைபெற்ற உருது சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு கூட்டத்தில் முடிவு
திருச்சி சிங்காரத் தோப்பில் உருது சங்கம் புதிய நிர்வாகிகள் தேர்வு கூட்டத்தில் அகில இந்திய அளவில் கவியரங்கம் நடத்துவது என தீர்மானம்.
திருச்சிராப்பள்ளி உருது சங்கம் புதிய நிர்வாகிகள் தேர்வு கூட்டம் சிங்காரதோப்பு, எம்.எல். எஸ் அலுவலகத்தில நடைபெற்றது.

திருச்சிராப்பள்ளி உருது சங்க கெளரவ தலைவராக பேராசிரியர் எச்.எஸ்.எச் உசைனி, தலைவராக சையத் முத்தஹர் சகாப்,பொதுச்செயலாளராக கவிஞர் சையது ஜாபர், பொருளாளராக எஸ்.எ. ஜமீல், துணைத்தலைவர்களாக ஷாஜஹான், அக்பர் உசேன், இணைச்செயலாளர்களாக சையத் பயாஸ் அஹமத், ஏ.ஹமீத் அலி சேட், செயற்குழு உறுப்பினர்களாக,சையத் அஹமத் முனவரி, அப்துல் கரீம்,சையத் அமீர்ஜான் , முஹம்மத் ஜலாலுத்தீன் அக்பர், முஹம்மத் ஜக்கிரியா, ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
கூட்டத்தில் வருகின்ற ஆகஸ்ட் 22 -ந்தேதி அகில இந்திய உருது கவியரங்கம் நடத்துவதென தீர்மானிக்கப்பட்டது.

