திருச்சியில் தீபாவளி பொருட்கள் வாங்க குவியும் மக்கள்.
திருச்சியில் தீபாவளி பொருட்கள் வாங்க குவியும் மக்கள்.
திருச்சியில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு
என்.எஸ்.பி சாலையில் தீபாவளி பொருட்கள் வாங்குவதற்காக திரண்ட ஆயிரக்கணக்கான மக்கள்.
வழக்கத்தைவிட மக்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்த என்.எஸ்.பி சாலை …
தீபாவளி பண்டிகை என்றாலே புத்தாடைகளை வாங்குவது மிக முக்கியமான நிகழ்வாக உள்ளது, அந்த வகையில் திருச்சி மாவட்டத்தை பொறுத்தவரை திருச்சி மட்டுமல்லாது சுற்றியுள்ள அரியலூர் பெரம்பலூர் கரூர் புதுக்கோட்டை நாமக்கல் போன்ற பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் தங்களுக்கு தேவையான பொருள்கள்,மற்றும் பொருள்கள் வாங்குவதற்காக திருச்சி என்.எஸ்.பி சாலைக்கு வருவார்கள்.
கடந்த ஒரு வாரமாக என்.எஸ்.பி சாலை களை கட்டி வருகிறது. இன்று வழக்கத்தைவிட கூட்டம் அதிகரித்துக் காணப்பட்டது.
சுற்றி உள்ள பல்வேறு மாவட்டங்களில் இருந்து என்.எஸ்.பி சாலை, சிங்காரத்தோப்பு பெரிய கடை வீதி போன்ற இடங்களில் மக்கள் கூடியதால் சாலைகள் முழுவதும் மக்கள் வெள்ளத்தில் நிரம்பியது.
இந்நிலையில் திருச்சி மாநகர காவல்துறை சார்பில் 178 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு மக்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய கண்காணிக்கப்பட்டு வருகிறது .
இரண்டு துணை ஆணையர்கள் 4 உதவி ஆணையர்கள் 12 காவல் ஆய்வாளர்கள் இந்த பகுதிகளில் மேற்பார்வை உள்ளனர்.
தீபாவளி திருடர்களை கண்காணிக்க மாற்று உடையில் போலீசார் ரோந்து வருகின்றனர்.
மேலும் கூட்ட நெரிசலில் முககவசம் அணியாமல் வரும் நபர்கள் மீதும் எச்சரிக்கை விடுத்து அபராதம் வசூலிக்கப்படுகிறது.