Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

கொலை மிரட்டல் விடுத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி முஸ்லீம் உரிமை பாதுகாப்புக் கழக பொதுச் செயலாளர் ஐ.ஜியிடம் மனு .

கொலை மிரட்டல் விடுத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி முஸ்லீம் உரிமை பாதுகாப்புக் கழக பொதுச் செயலாளர் ஐ.ஜியிடம் மனு .

0

முஸ்லீம் உரிமை பாதுகாப்புக் கழகம் பொதுச் செயலாளருக்கு கொலை மிரட்டல்
ஐ.ஜி . இடம் புகார் மனு.

முஸ்லீம் உரிமை பாதுகாப்புக் கழக மாநில பொதுச்செயலாளர் இடிமுரசு இஸ்மாயில் இன்று( செவ்வாய்க்கிழமை) திருச்சி ஐ.ஜி. பாலகிருஷ்ணனை சந்தித்து ஒரு புகார் மனு அளித்தார் .

அதில் அவர் கூறியிருப்பதாவது;-

நான் திருச்சி வடக்கு காட்டூர் காந்திநகர் பகுதியில் வசித்து வருகிறேன் .நான் திருச்சி தஞ்சாவூர் ரோட்டில் உள்ள ஒரு பேக்கரியில் குழந்தைகளுக்கு சினேக்ஸ் வாங்கினேன் .

அப்போது அந்த பொருளின் தரம் தொடர்பாக கடை ஊழியரிடம் கேட்டபோது பொறுப்பற்ற பதில் அளித்தனர் . இந்த நிலையில் உணவு பாதுகாப்பு மாவட்ட நியமன அலுவலர் தொடர்பு கொண்டு மேற்கண்ட கடையில் ஆய்வு செய்வதற்காக புகார் அளித்தேன்.

இதையடுத்து அந்த கடையில் சோதனை நடத்தப்பட்டது .இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் என் செல்போனுக்கு தொடர்பு கொண்டு உன்னை கண்டம் துண்டமாக வெட்டி நடுரோட்டில் கொன்றுவிடுவேன் என கொலை மிரட்டல் விடுத்தனர்.

ஆகவே மேற்படி நபர் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு

அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.