Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

எங்கள் கட்சி நிர்வாகிகள் மீது தாக்குதல் நடைபெற்றால் மு.க. ஸ்டாலின் பொறுப்பேற்க வேண்டும்.முஸ்லிம் ராஷ்ட்ரீய மன்ச் கட்சியின் மாநில பொது செயலாளர் காயல் அப்பாஸ் அறிக்கை.

0

முஸ்லிம் ராஷ்டிரீய மன்ச்யின் நிர்வாகிகள் மீதான தாக்குதல் படுகொலைகள் ஏதேனும் சம்பவங்கள் நிகழ்ந்தால் அதற்கு தமிழக முதல் அமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் பொறுப்பேற்க்க வேண்டும் என முஸ்லிம் ராஷ்டிரீய மன்ச்யின் மாநில பொது செயலாளர் காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார் .

ஆர்.எஸ்.எஸ். சிறுபான்மை அமைப்பான முஸ்லிம் ராஷ்டிரீய மன்ச்யின் சித்தாந்த்தை ஏற்று கொண்டு நிர்வாகிகளாகவும் , உறுப்பினராகவும் தமிழகத்தில் ஆயிரம் கணக்காண இஸ்லாமியர்கள் இயக்கத்தில் பயணித்து வருகிறார்கள்.

முஸ்லிம் ராஷ்டிரீய மன்ச்யின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் நம் இந்திய பாரத நாட்டுக்காகவும் மக்கள் நலனுக்காகவும், தொடர்ந்து மக்களுக்கு சேவைகள் செய்து வரும் இந்த நிலையில் கருத்தியல் ரீதியாகவும் , அரசியல் ரீதியாகவும் , எதிர் கொள்ள முடியாதவர்கள் இயக்கத்தின் நிர்வாகிகள் மீதும் அவர்களது குடும்பத்தினர்கள் மீது திட்ட மிட்டு ஏதோ ஓரு காரணம் காட்டி கொலை வெறி தாக்குதல் நடத்தி வருகிறார்கள் .

முஸ்லிம் ராஷ்டிரீய மன்ச் இஸ்லாமியர்களுக்கு எதிரான ஓரு அமைப்பு என்று வெறுப்புடனும் , ஆதங்கத்துடனும் இருக்கும் மத வெறி பிடித்த இஸ்லாமியர்களால் எப்போது வேண்டுமானாலும் தாக்க படலாம் ,
படுகொலை செய்ய படலாம் என்கின்ற அச்சத்தோடு நிர்வாகிகள் மக்கள் பணிகளை செய்து வருகிறார்கள்.

ஆகவே இனி வரும் காலங்களில் முஸ்லிம் ராஷ்டிரீய மன்ச்யின் நிர்வாகிகள் மீதான தாக்குதல் , படு கொலை சம்பவங்கள் எதேனும் நிகழ்ந்தால் அதற்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முழு பொறுப்பேற்க்க வேண்டும்,

முஸ்லிம் ராஷ்டிரீய மன்ச்யின் நிர்வாகிகள் பாதுகாப்பு இல்லாத சூழலில் உள்ளனர் ஆகவே அவர்களுக்கு காவல் துறை பாதுகாப்பு அளிக்க தகுந்த நடவடிக்கையை உடனடியாக எடுக்க வேண்டும் , என முஸ்லிம் ராஷ்டிரீய மன்ச்யின் சார்பாக கேட்டு கொள்கிறோம். இவ்வாறு காயல் அப்பாஸ் கூறியுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.