சென்னை அண்ணாசாலையில் பயங்கர தீ விபத்து . கட்டிடத்தின் முன் சிக்கியவர்களின் நிலை என்ன ?
சென்னையில் அதிர்ச்சி:
அண்ணா சாலை சாந்தி தியேட்டர் அருகே அமைந்துள்ள தனியார் நிறுவனம் ஒன்றின் கட்டடத்தில் பெரும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
தீயணைப்பு வீரர்கள் 4 வண்டிகளில் வந்து தீயை அணைக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
கட்டடத்தில் 40க்கும் மேற்பட்டவர்கள் சிக்கியுள்ளதாக தகவல்.

சிக்கியவர்களை மீட்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.
கட்டடத்தில் பணிபுரிந்து வரும் ஊழியர்களை ராட்சத கிரேன் மூலம் தீயணைப்புத் துறையினர் மீட்புப் பணியில் ஈடுபட்டு உள்ளனர்.
எனவே, அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
பல கிலோ மீட்டர் தூரம் வாகனங்கள் அணிவகுத்து நிற்கிறது.
இந்த தீ விபத்து சென்னை அண்ணாசாலை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.