திருச்சி மாநகர் மாவட்ட அ.இ.அ.தி.மு.கழக செயலாளர் வெல்லமண்டி.ந. நடராஜன், சுற்றுலாத்துறை அமைச்சரின் அறிக்கை:
நம் நெஞ்சங்களில் வாழும் இதயதெய்வம் மறைந்த தமிழக முதல்வர் காட்டிய வழியில் தமிழக முதல்வர், கழக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர், கழக ஒருங்கிணைப்பாளர் 0.பன்னீர்செல்வம் ஆகியோரின் ஆணைக்கிணங்க /
திருச்சி மண்டல பொறுப்பாளரும், துணை ஒருங்கிணைப்பாளருமான R.வைத்திலிங்கத்தின் வழிகாட்டுதளின்படி பேரறிஞர் அண்ணாவின் 52-வது நினைவு நாளான 03.02.2021 புதன் கிழமை காலை 10.30 மணியளவில் திருச்சி மேலசிந்தாமணியில் உள்ள பேரறிஞர் அண்ணா திருவுருவ சிலைக்கு திருச்சி மாநகர் மாவட்ட அ.இ.அ.தி.மு.க சார்பில் மாலை அணிவித்து அஞ்சலி
செலுத்தப்படும்.
அதுசமயம் கழக நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் மாவட்ட கழக செயலாளர்கள், முன்னாள் மாவட்ட கழக நிர்வாகிகள் மாவட்ட கழக, பகுதி கழக வட்ட கழக செயலாளர்கள், நிர்வாகிகள் கழக செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள் எம்.ஜி.ஆர். மன்றம், மாண்புமிகு அம்மா பேரவை, எம்.ஜி.ஆர். இளைஞர் அணி மகளிர் அணி, மாணவர் அணி, அண்ணா தொழிற்சங்க பேரவை, வழக்கறிஞர் பிரிவு, சிறுபான்மையினர் நலப்பிரிவு, விவசாயப் பிரிவு, மீனவர் பிரிவு, இலக்கிய அணி, மருத்துவ அணி, அமைப்பு சாரா ஓட்டுநர் அணி, இளைஞர் பாசறை மற்றும் இளம்பெண்கள் பாசறையை சேர்ந்தவர்கள், தகவல் தொழில்நுட்ப
பிரிவினை சேர்ந்தவர்கள் வர்த்தக அணி கலை பிரிவு தலைவர்கள், Ex.உள்ளாட்சி தலைவர்கள் பிரதிநிதிகள் Ex.கோட்டத் கூட்டுறவு சங்க தலைவர்கள், இயக்குநர்கள், தலைமை கழக பேச்சாளர்கள், செயல்வீரர்கள் வீராங்கனைகள் அனைவரும் திரளாக கலந்து கொள்ள வேண்டுகிறோம்,
என அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.