உயிர்பலி வாங்க காத்திருக்கும் மின்கம்பம். மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா ? பகுதி மக்கள் எதிர்பார்ப்பு
திருச்சி புத்தூர் வடக்கு எடத்தெருவில் உயிர்பலி வாங்க காத்திருக்கும் மின் கம்பம்.
திருச்சி புத்தூர் வடக்கு தெருவில் குடியிருப்பு பகுதியில் உள்ள மின் கம்பம் காங்கிரட் பெயர்ந்து மழை நேரத்தில் எப்போது வேண்டுமானாலும் கீழே சாயலாம் என்ற நிலையில் உள்ளது.
இது குறித்து பல மாதங்களுக்கு முன்பே அப்பகுதி பொதுமக்கள் மாநகராட்சிக்கு புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை.
பெரும் அசம்பாவிதம் ஏதும் நடக்கும் முன்னரே மாநகராட்சி அதிகாரிகள் சரி செய்வார்களா என அப்பகுதி பொதுமக்கள் எதிர்பார்ப்பு.