Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

தமிழகத்தில் மீண்டும் மழைக்கு வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம் தகவல்.

0

தமிழகத்தில் வருகின்ற 16ஆம் தேதி முதல் மீண்டும் மழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

தமிழகத்தில் புயல் காரணமாக கடந்த ஒரு வாரத்திற்கு முன்னர் பல்வேறு மாவட்டங்களில் கன மழை கொட்டி தீர்த்தது. அதனால் மக்கள் அனைவரும் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பிக் கொண்டிருக்கிறார்கள்.

இந்நிலையில் தமிழகத்தில் வருகின்ற 16 மற்றும் 17ம் தேதிகளில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வடகிழக்குப் பருவக் காற்றின் காரணமாக இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும். புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் மழை பெய்யும் எனவும் தெரிவித்துள்ளது.
மேலும் டிசம்பர் இறுதி வரை வடகிழக்கு பருவமழை காலம் என்பதால் வருகின்ற 16-ஆம் தேதிக்கு பிறகு மீண்டும் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக எச்சரிக்கை விடுத்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.