Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

பள்ளி மாணவர்களுக்கு வீட்டுப்பாடம் கிடையாது. மத்திய கல்வி அமைச்சகம் அறிவிப்பு :

பள்ளி மாணவர்களுக்கு வீட்டுப்பாடம் கிடையாது. மத்திய கல்வி அமைச்சகம் அறிவிப்பு :

0

ஒன்று முதல் பத்தாம் வகுப்பு மாணவர்களின் புத்தகப்பை சுமையை அதிரடியாக குறைக்கும் வகையில் மத்திய கல்வி அமைச்சகம் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளி கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. ஆனால் கடந்த திங்கட்கிழமை முதல் கல்லூரி இறுதியாண்டு மாணவர்களுக்கு கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளது.

மேலும் பள்ளிகள் திறப்பு பற்றி அரசு எந்த ஒரு அறிவிப்பையும் வெளியிடவில்லை.

அதனால் பள்ளி மாணவர்கள் அனைவரும் ஆன்லைன் மூலமாகவே பாடங்கள் கற்பித்து வருகின்றனர்.
இந்நிலையில் ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரை மாணவர்களின் புத்தகச் சுமை, மாணவர்களின் உடல் எடையில் 10 சதவீதம் மட்டுமே இருக்க வேண்டும் மத்திய கல்வி அமைச்சகம் பரிந்துரைத்துள்ளது.

மேலும் இரண்டாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு வீட்டுப்பாடம் கிடையாது. புத்தகப் பையின் எடை யை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். புத்தகங்களை வைத்து செல்லா லாக்கர்கள், டிஜிட்டல் எடை இயந்திரம், தண்ணீர் பாட்டில் சுமை தவிர்க்க தரமான குடிநீர் வசதியை பள்ளிகள் வழங்க வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளது.

அரசின் இந்த அறிவிப்பு மாணவர்களின் பெற்றோர்கள் இடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.