Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி ஏர்போர்ட் அருகே கத்தி முனையில் பணம் பறித்த வாலிபர் கைது.

0

'- Advertisement -

 

திருச்சி விமான நிலையம் அருகே
கத்தி முனையில் வாலிபரிடம் பணம் பறித்த
3 வழக்குகளில் தொடர்புடையவர் கைது .

திருச்சி ஏர்போர்ட் ஸ்டார் நகரை சேர்ந்தவர் தேவதாஸ். இவரது மகன் மாரியப்பன் (வயது 29). இவர் திருச்சி விமான நிலையம் அருகே ஒரு டீக்கடை அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த வாலிபர் கத்தி முனையில் மிரட்டி இவரிடம் பணத்தை பறித்து சென்று விட்டார். இது குறித்து திருச்சி ஏர்போர்ட் போலீசில் மாரியப்பன் புகார் செய்தார். புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் விசாலாட்சி வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வந்தார்.

இந்நிலையில் இது தொடர்பாக வயர்லெஸ் ரோடு பகுதியைச் சேர்ந்த கார்த்திக் (வயது 36) என்பவரை கைது செய்தார். அவரிடம் கத்தி பறிமுதல் செய்யப்பட்டது. இவர் மீது மூன்று வழக்குகள் ஏர்போர்ட் காவல் நிலையத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.