கேட்பாரற்றுக் கிடந்த தங்க மோதிரத்தை பள்ளியில் ஒப்படைத்த அரசு பள்ளி மாணவிகளுக்கு பாராட்டு.
கேட்பாரற்றுக் கிடந்த தங்க மோதிரத்தை பள்ளியில் ஒப்படைத்த அரசு பள்ளி மாணவிகளுக்கு பாராட்டு.
அரசு பள்ளி மாணவிகளுக்கு குவியும் பாராட்டு.
வெள்ளிக்கிழமை பிற்பகல் 3.15 மணியளவில்,
உமாமகேசுவர மேனிலைப் பள்ளியின் பிற்பகல் இடைவேளை நேரத்தின்போது, 10 ஆம் வகுப்பு அ பிரிவைச் சார்ந்த மாணவிகள்
1. எஸ். ஸ்ரீமதி
2. பி.தர்ஷினி
3. ஆர்.தாரணி
4. ஏ. கண்மணி
5. ஆர். மீனாட்சி
ஆகிய ஐந்து மாணவிகள், பள்ளி வளாகத்தில், ஒரு தங்க மோதிரம், தரையில் கிடந்ததைக் கண்டு எடுத்து, பொறுப்புணர்வுடனும், நேர்மையுடனும், பட்டதாரி கணித ஆசிரியரான கி.ஜெயக்குமார் அவர்களிடம் கொடுத்தனர்.
உடன் இருந்த உடற்கல்வி ஆசிரியர் து. நடராசன் அவர்கள், மாணவிகள் ஐவரையும் புகைப்படம் எடுத்தார்.
பின்னர் தங்க மோதிரம், பள்ளித் தலைமையாசிரியர் வெ.சரவணன் அவர்களிடம் ஒப்படைக்கப் பட்டது.
இந்நிமிடம் வரை, அந்த தங்க மோதிரத்தைத் தேடி வரவில்லை.
தங்க மோதிரத்தை தொலைத்தவர்கள் தொடர்புக்கு:-
உமாமகேசுவர மேனிலைப் பள்ளி,
கரந்தைத் தமிழ்ச் சங்கம்.
கரந்தை,
தஞ்சாவூர் – 613002
செல்: 94434 76716 ஆசிரியர் ஜெயக்குமார்.