Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி மேலப்பஞ்சபூர் கோவிலில் வெள்ளி வேல்,பித்தளை பொருட்கள் மற்றும் பணத்தை கொள்ளை அடித்த 3 மர்ம நபர்களுக்கு வலை

0

'- Advertisement -

திருச்சி மேலப்பஞ்சபூர் அருள்மிகு ஸ்ரீ சுப்பிரமணியர் திருக்கோவிலில் முருகன் கையில் இருந்த வெள்ளி வேல் மற்றும் பித்தளை பொருட்கள் கொள்ளை

Ad banner

திருச்சி மேலப்பஞ்சப்பூர் பகுதியில் அமைந்துள்ள புகழ்பெற்ற அருள்மிகு ஸ்ரீ சுப்பிரமணியர் திருக்கோவிலில் இன்று அதிகாலை சுமார் 5 மணியளவில் மர்ம நபர்கள் புகுந்து கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கோவிலுக்குள் நுழைந்த 3 மர்ம நபர்கள், மூலவர் முருகன் கையில் இருந்த அரை கிலோ கிலோ எடையுள்ள வெள்ளி வேல் மற்றும் உண்டியலில் இருந்த சுமார் 40 ஆயிரம் ரூபாய்க்கும் மேற்பட்ட காணிக்கைப் பணத்தைத் திருடிச் சென்றுள்ளனர்.

மேலும், கோவில் வளாகத்தில் உள்ள கட்டிடத்தில் வைக்கப்பட்டிருந்த

11 பித்தளைக் குடங்கள், 11 பித்தளைச் செம்புகள்,

11 பித்தளைக் குத்துவிளக்குகள்

உள்ளிட்ட விலை உயர்ந்த பூஜைப் பொருட்களையும் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

மர்ம நபர்கள் கோவிலுக்குள் புகுந்து காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த திருச்சி எடமலைப்பட்டி புத்தூர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.