Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

மலேசியாவில் நடந்த 20 நாடுகள் பங்கேற்ற கராத்தே போட்டியில் திருச்சி பள்ளி மாணவன் 2 பிரிவுகளில் வெள்ளிப் பதக்கங்கள் வென்று சாதனை.

0

'- Advertisement -

மலேசியாவில் நடந்த 20 நாடுகள் பங்கேற்ற கராத்தே போட்டியில் திருச்சி பள்ளி மாணவன் வெள்ளிப் பதக்கம் வென்று சாதனை.

Ad banner

மலேசியாவில் 22 -வது இன்டர்நேஷனல் ஓப்பன் சாம்பியன்ஷிப் கராத்தே போட்டிகள் நடைபெற்றது.இதில் இந்தியா உட்பட 20 நாடுகளைச் சேர்ந்த 2000-க்கும் மேற்பட்ட  வீரர் வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.இதில் திருச்சி கேம்பியன் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப்பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு மாணவன் ரோஹித் கட்டா, கும்மிட்டி ஆகிய இரண்டு பிரிவுகளில் கலந்து கொண்டார். பின்னர்

இரண்டு பிரிவுகளிலும் மாணவன் வெள்ளிப் பதக்கங்களை பெற்று சாதனை படைத்தார்.இந்த மாணவனுக்கு மாஸ்டர் ஈஸ்வரன் பயிற்சி அளித்தார்.

பதக்கங்களை வென்று விமான மூலம் திருச்சி திரும்பிய மாணவன் ரோகித்துக்கு பயிற்சியாளர் ஈஸ்வரன் தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.