Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

வாக்களித்த பொதுமக்கள் மற்றும் பசி தூக்கம் இன்றி உழைத்த அனைவருக்கும் நன்றி.அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி

0

'- Advertisement -

வாக்களித்த பொதுமக்களுக்கும், உழைத்த உடன்பிறப்புகளுக்கும் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி நெஞ்சார்ந்த நன்றி.

Ad banner

தமிழ்நாட்டின் உரிமைகளை மீட்டெடுக்கவும், மாநிலத்தின் வளர்ச்சி, முன்னேற்றம் மற்றும் சமூக நல்லிணக்கத்தைப் பாதுகாக்கவும் உறுதுணையாக நின்று, மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்களித்த பொதுமக்களுக்கு திருச்சி தெற்கு மாவட்ட தி.மு க செயலாளரும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சருமான முனைவர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் தனது நன்றியைத் தெரிவித்துள்ளார்.

TVK ad

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

“நடைபெற்று முடிந்த சட்டமன்றத் தேர்தலில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில் போட்டியிட்ட திருவெறும்பூர் தொகுதி வேட்பாளராகிய எனக்கும், திருச்சி கிழக்கு சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் இனிகோ இருதயராஜிக்கும், மணப்பாறை சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் அப்துல் சமத்க்கும் வாக்குகள் அளித்துள்ள வாக்காளப் பெருமக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மேலும், தேர்தல் களத்தில் வெற்றி ஒன்றையே இலக்காகக் கொண்டு, பசி, தூக்கம் பாராமல் அயராது உழைத்த நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் கூட்டணி கட்சிகளின் அனைத்துப் பொறுப்பாளர்களுக்கும், தோழர்களுக்கும் எனது அன்பையும், நன்றியையும் உரித்தாக்குகிறேன் என அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.