நாளை திருச்சி வரும் எடப்பாடி பழனிச்சாமி வரவேற்க அனைவரும் திரண்டு வாரீர்.மாவட்ட செயலாளர்கள் குமார், சீனிவாசன் அழைப்பு .
திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட கழக செயலாளர்,முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ப.குமார்

திருச்சி மாநகர் மாவட்ட கழக செயலாளர், முன்னாள் துணை மேயர் ஜெ.சீனிவாசன்,பரஞ்சோதி ஆகியோரின் அறிக்கை:-
அண்ணா திராவிட முன்னேற்ற கழக பொதுச்செயலாளர், முன்னாள் முதலமைச்சர், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர், எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் (11.4.2026, சனிக்கிழமை) மதியம் 1.15மணி அளவில் திருச்சி விமான நிலையத்திற்கு வருகை தர உள்ளார் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
அதுசமயம் கழக நிர்வாகிகள், தோழமை கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அனைவரும் திரளாக கலந்து கொள்ளுமாறு திருச்சி மாவட்ட செயலாளர்கள் குமார், சீனிவாசன் மற்றும் பரஞ்ஜோதி ஆகியோர் கேட்டுக்கொண்டுள்ளனர்.

