திருச்சி திருவெறும்பூர் தொகுதி அதிமுக வேட்பாளர் குமாருக்கு தான் இஸ்லாமியர்கள் அனைவரும் வாக்களிப்போம் .
திருவெரும்பூர் சட்டமன்ற தொகுதியின் அதிமுக வெற்றி வேட்பாளர் .ப.குமார் இன்று அண்ணாநகர் பகுதியில் உள்ள ஜலித் மதினா பள்ளிவாசல் நிர்வாகிகளை சந்தித்து இரட்டை இலைக்கு ஆதரவு கோரினார்.

மேலும் திருவெறும்பூர் தொகுதியில் அதிமுக சார்பில் தான் மேற்கொள்ள உள்ள மக்கள் நலப் பணிகள் மற்றும் அதிமுகவின் தேர்தல் அறிக்கைகளை உடனுக்குடன் நிறைவேற்றுவேன் என உறுதி கூறினார்.
இதளை தொடர்ந்து இஸ்லாமியர்கள் அனைவரும் இந்த முறை தேசிய ஜனநாயக கூட்டணியின் அதிமுகவுக்கு தான் வாக்களிப்போம் என உறுதி அளித்துள்ளனர்.

இந்த நிகழ்வில் பகுதி செயலாளர் பாஸ்கரன் என்கிற கோபால் ராஜ், முன்னாள் பொதுக்குழு உறுப்பினர் யாக்கத் அலி, வட்ட செயலாளர்கள் அபிமன்யு, யோகானந்தம், அன்பு துரை, பகுதி துணை செயலாளர் சீனிவாசன், மாவட்ட தகவல் தொழில் நுட்ப பிரிவு இனை செயலாளர் கோபி , மாவட்ட அண்ணா தொழில் சங்கம் கார்த்தி , மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு பிரசன்னா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

