மாதாந்திர மின் பராமரிப்பு பணியின் காரணமாக
திருச்சி மாநகரில் நாளை 21-ந்தேதி குடிநீர் வினியோகம் ரத்து.
மாநகராட்சி ஆணையர் அறிவிப்பு.
திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட கொள்ளிடம் ஆளவந்தான் படித்துறை மற்றும் பொது தரை மட்ட நீர் தேக்க தொட்டி நீரேற்று நிலையங்களுக்கு திருவரங்கம் துணை மின் நிலையத்திலுருந்து மின் சப்ளை வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் திருவரங்கம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணி இன்று (20-ந்தேதி) நடைபெற இருப்பதால் மேற்கண்ட நீரேற்று நிலையங்களிலிருந்து குடிநீர் செல்லும் இடங்களான மத்திய சிறைச்சாலை, சுந்தராஜநகர் புதியது, சுந்தராஜநகர் பழையது, ஜே.கே.நகர், செம்பட்டு, காஜாமலை பழையது, ரெங்கா நகர், சுப்ரமணிய நகர் புதியது, வீ .என் .நகர் புதியது, தென்றல் நகர் புதியது, கவி பாரதி நகர், காமராஜ் நகர், கிராப்பட்டி புதியது, கிராப்பட்டி பழையது, அன்பு நகர் பழையது, அன்பு நகர் புதியது, எடமலைப்பட்டி புத்தூர் புதியது, பஞ்சப்பூர், அம்மன் நகர், தென்றல் நகர் இ.பி.காலனி, அரியமங்கலம் கிராமம், மலையப்ப நகர் புதியது, மலையப்ப நகர் பழையது, ரயில் நகர் புதியது, ரயில் நகர் பழையது, முன்னாள் ராணுவத்தினர் காலனி புதியது, முன்னாள் ராணுவத்தினர் காலனி பழையது, எம்.கே.கோட்டை செக்ஸன் ஆபீஸ், எம்.கே.கோட்டை நாகம்மை வீதி, எம்.கே.கோட்டை நூலகம், பொன்னேரிபுரம் புதியது, பொன்னேரிபுரம் பழையது, அம்பேத்கார் நகர், விவேகானந்த நகர், எல்.ஐ.சி. புதியது, விஸ்வநாதபுரம், கே. சாத்தனுர், தென்றல் நகர், ஆனந்த நகர், சுப்ரமணிய நகர், சத்தியவாணி கே கே நகர், அம்மா மண்டபம், ஏ.ஐ.பி. இ.ஏ. நகர், பாலாஜி ஆவின்யூ, தேவி பள்ளி மேலூர், பெரியார் நகர், டி.வி.கோவில், தேவதானம், விறகுப்பேட்டை, மகாலட்சுமி நகர், சங்கிலியாண்டபுரம், கல்லுக்குழி, அரியமங்கலம் உக்கடை, தெற்கு உக்கடை, ஜெகநாதபுரம் ஆகிய பகுதிகளில் அமைந்துள்ள மேல்நிலை நீர் தேக்கத் தொட்டிகளில் குடிநீர் விநியோகம் நாளை புதன்கிழமை 21-ந் தேதி ஒரு நாள் இருக்காது.

22. ந்தேதி அன்று முதல் வழக்கம் போல் குடிநீர் விநியோகம் செய்யப்படும்
எனவே பொது மக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு திருச்சி மாநகராட்சி ஆணையர் கேட்டுக்கொண்டுள்ளார்.

