அடையாளம் காண உதவுங்கள்: உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் இவரைப் பற்றி தெரிந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய எண் ….
சென்னை ரெட் ஹில்ஸ் பகுதியை சேர்ந்தவர் தாயம்மாள் ( வயது 50) கணவர் பெயர் செல்வராஜ் .
தாயம்மாள் கடந்த இரண்டு நாட்களாக திருச்சி ரயில் நிலைய நடைமேடையில் உடல் நல குறைவால் காணப்பட்டவரை
ரயில்வே காவல்துறையினர் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
இந்த நிலையில் தொடர்ந்து சிகிச்சையில் இருந்து வரும் தாயமாலுக்கு மகன்கள் இருப்பதாக (பேச முடியாததால்) தலையசைக்கிறார். (இன்று 20.12.2025 சனிக்கிழமை)
இவரைப் பற்றி தகவல் ஏதும் தெரிந்தவர்கள் இருந்தால் திருச்சி ரயில்வே காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளரை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்க கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
உதவி ஆய்வாளரின் தொலைபேசி எண்கள் :- 9080563321 மற்றும் 94434 72524

