அமமுக, பாமக, மதிமுக கட்சிகளை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் மாவட்ட செயலாளர் பரஞ்ஜோதி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர் .
திருச்சி தில்லை நகரில் அமைந்துள்ள அதிமுக புறநகர் வடக்கு மாவட்ட கட்சி அலுவலகத்தில் புறநகர் வடக்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான மு.பரஞ்சோதி முன்னிலையில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் திருச்சி வடக்கு, மேற்கு,, பா.ம.க.,மதிமுக, ஆகிய கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள்
30க்கும் மேற்பட்டோர் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக திருச்சி வடக்கு மாவட்ட ஐடி விங் மாநில துணை செயலாளர் கே.ஆர். இளையராஜா, இளைஞர் பாசறை மாவட்ட செயலாளர் டோல்கேட் எஸ். கார்த்திக் ஆகியோரது தலைமையில், தங்களை அஇஅதிமுகவில் இணைத்து கொண்டனர்..


இந்நிகழ்வில் மாவட்ட அவைத்தலைவர் சமயபுரம் டி.இராமு, ஒன்றிய கழக செயலாளர் ஆதாளி, பொதுக்குழு உறுப்பினர் அ. திருநாவுக்கரசு, மாவட்ட மீனவரணி செயலாளர் பேரூர் கண்ணதாசன், மாவட்ட மாணவரணி செயலாளர் டி.அறிவழகன், மாவட்ட அம்மா பேரவை இணை செயலாளர் ரவிசங்கர், எட்டரை தா. அன்பரசு மற்றும் நிர்வாகிகள் ராஜேந்திரன், பொன். முருகேன், கந்தசாமி, ராஜாராம், தினேஷ், சுபாஷ் உள்ளிட்ட பலர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

