Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

பள்ளி திறந்த முதல் நாளே இன்று மாணவர்களுக்கு தமிழக அரசின் விலையில்லா பாடப் புத்தகங்கள் வழங்கப்பட்டன.

0

'- Advertisement -

காலாண்டு விடுமுறை முடிந்து இன்று பள்ளிகள் திறப்பு:

 

தமிழக அரசின் விலையில்லா பாடப்புத்தகங்கள் வழங்கல்

 

ஆசிரியர்கள் மாணவ, மாணவிகளுக்கு வழங்கினர்

 

தமிழகம் முழுவதும் இன்று காலாண்டு விடுமுறை முடிந்து பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டன. திருச்சி மாவட்டத்தில் இயங்கி வரும் அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்க, நடுநிலைப் பள்ளிகளுக்கு பள்ளி திறந்த முதல் நாளே இன்று மாணவர்களுக்கு தமிழக அரசின் விலையில்லா பாடப் புத்தகங்கள், எண்ணும் எழுத்தும் பாடப்புத்தகங்கள் வழங்கப்பட்டன.

 

இதேபோல் திருச்சி தென்னூர் சுப்பையா நடுநிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு விலையில்லா பாடப் புத்தகங்களை பள்ளி தலைமையாசிரியர் ஜீவானந்தன் வழங்கினார்.இதே போல் திருச்சி மாநகரில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்க, நடுநிலைப்பள்ளி மாணவ மாணவிகளுக்கு பாடப் புத்தகங்கள் வழங்கப்பட்டன.

பாட புத்தகங்களை அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் வழங்கினர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.