Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சியில் மனைவி குடும்பம் நடத்த வராததால் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை.

0

 

திருச்சியில் மனைவி குடும்பம் நடத்த வராததால் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை.

திருச்சி உறையூர் பிள்ளையார் கோவில் தெரு பகுதியைச் சேர்ந்தவர் ரவி ( வயது 38) இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர். கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு மனைவி அவரை பிரிந்து சென்று விட்டார்.
மீண்டும் பலமுறை குடும்ப நடத்த அழைத்தும் அவர் குடும்பம் நடத்த வர மறுத்துவிட்டார்.

இதனால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த ரவி யாரும் எதிர்பாராத விதமாக வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து உறையூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.