Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி குண்டூர் அருகே வீலிங் செய்த வாலிபரின் 2 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்.எஸ் பி வருண்குமார் அதிரடி.

0

 

திருச்சி -புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில், குண்டூா் பகுதியில் இளைஞா் பொதுமக்களை அச்சுறுத்தும் விதமாக இருசக்கர வாகனத்தில் சாகசம் (வீலிங்) செய்து, அதனை சமூக வலை தளங்களில் காட்சிப்படுத்தி பதிவிட்டிருந்தாா்.

 

இது தொடா்பாக திருச்சி மாவட்ட காவல் எண் 94874 64651-க்கு தகவல் வந்தது. அதன்பேரில் நடவடிக்கை எடுக்க மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் வீ. வருண்குமாா் உத்தரவிட்டாா். இதுதொடா்பாக போலீஸாா் விசாரணை மேற்கொண்டும், சமூக வலைதளங்களை கண்காணித்தும் வந்தனா்.

இதில், திருச்சி மாவட்டம், குண்டூா், வடக்கு தெருவைச் சோ்ந்த குமரகுரு மகன் சச்சின் (வயது 18) என்ற இளைஞா் சாகசத்தில் ஈடுபட்டதும், காட்சிகளை சமூக வலைதளங்களில் தொடா்ந்து பதிவிட்டு வந்ததும் தெரியவந்தது.

இதுதொடா்பாக, நவல்பட்டு காவல் நிலையப் போலீஸாா் வழக்குப் பதிந்து, இளைஞரை நேற்று ஞாயிற்றுக்கிழமை கைது செய்து,

அவரிடமிருந்து 2 இருசக்கர வாகனங்களையும் பறிமுதல் செய்தனா்.

இது போன்ற சாகசங்களில் ஈடுபடும் நபா்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை மேற்கொண்டு, அவா்களது வானங்கள் பறிமுதல் செய்யப்படும் என திருச்சி மாவட்ட எஸ்.பி., எச்சரிக்கை விடுத்துள்ளாா்.

மேலும் இதுபோன்ற புகாா்களை பொதுமக்கள் 94874 64651 என்ற மாவட்டக் காவல் உதவி எண்ணுக்கு தகவல் தெரிவிக்கலாம் எனவும் அவா் தெரிவித்துள்ளாா்.

Leave A Reply

Your email address will not be published.