ரயிலில் அடிபட்டு இறந்த இளைஞரை
நல்லடக்கம் செய்த சமூக ஆர்வலர்.
திருச்சி கோட்டை ரயில் நிலையத்திற்கும் முத்தரசநல்லூர் ரயில் நிலையத்திற்கும் இடையே சுமார் 25 வயது மதிக்கத்தக்க இளைஞர் ரயிலில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே இறந்துள்ளார்.
இறந்தவர் குறித்து திருச்சி இருப்புப் பாதை காவல் துறையினர் விசாரிக்கையில் இறந்தவர் குறித்த விபரம் யாருக்கும் தெரியவில்லை. பெயர் விலாசம் தெரியாத சுமார் 25 வயது மதிக்கத்தக்க இளைஞர் பிரேதத்தை திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் உடற்கூறாய்வு செய்யப்பட்டது. உரிமை கோரப்படாத ஆதரவற்ற இறந்த நபர் நல்லடக்கத்திற்காக திருச்சி இருப்புப் பாதை காவல் நிலைய காவலர் விக்ரம் திருச்சி அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் யோகா ஆசிரியர் விஜயகுமாருக்கு தகவல் அளித்தார்.
தகவலின் அடிப்படையில் திருச்சி இருப்புப் பாதை காவல் நிலைய காவலர் விக்ரம் முன்னிலையில் ரயிலில் அடிபட்டு இறந்த உரிமை கோரப்படாத ஆதரவற்ற அனாதைப் பிரேதத்திற்கு அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் யோகா ஆசிரியர் விஜயகுமார் இறுதி சடங்கு செய்து நல்லடக்கம் செய்தார்.