

திருச்சி பாலக்கரை கெம்ஸ்டவுன் பகுதி யைச் சேர்ந்தவர் வேளாங்கண்ணி இவரது மகன் பெஞ்சமின் பிராங்க்ளின் (வயது 27) மதுப்பழக்கத்திற்கு அடிமையான இவர் வேலைக்கு செல்லாமல் வீட்டிலே இருந்துள்ளார்.
இந்நிலையில் நேற்று வீட்டில் யாரும் இல்லாத இல்லாத பொழுது வீட்டின் உத்திரத்தில் தனது தாயாரின் சேலையால் தூக்கு மாட்டி இறந்துள்ளார்.
தகவல் அறிந்த போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதுக்குறித்து பாலக்கரை போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

