திருச்சியில்
பிரதமரின் தாயார் மறைவுக்கு த.மா.கா. சார்பில் அஞ்சலி.
பாரத பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் உடல் நலக்குறைவால் மரணம் அடைந்தார். அவரது
மறைவையொட்டி திருச்சியில் அவரது உருவப்படத்திற்கு த.மா.கா. சார்பில் மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட தலைவர் இன்டர்நெட் ரவி, மாநில செயற்குழு உறுப்பினர் தர்மராஜ், புறநகர் மாவட்ட தலைவர்கள் குணா, கே.வி.ஜி.ரவீந்திரன், மாவட்ட பொருளாளர் கே.டி. தனபால், மாநில பொதுக்குழு உறுப்பினர் ராஜு,பலர் கலந்து கொண்டனர்.

