இஸ்ரோவில் வேலை பார்த்த அதிகாரியின் இருசக்கர வாகனம் திருச்சி சுப்பிரமணியபுரத்தில் திருட்டு.
திருச்சி சுப்பிரமணியபுரம் ஹவேஸ் காலனி பகுதியை சேர்ந்தவர் வைத்தியநாதன் (வயது 82 ) இவர் ஸ்ரீ ஹரிகோட்டாவில் உள்ள இஸ்ரோவில் ஓய்வு பெற்ற அதிகாரி ஆவார். இந்த நிலையில் கடந்த மாதம் 21-ம் தேதி தனது இருசக்கர வாகனத்தை வீட்டின் முன்பு நிறுத்தி இருந்தார். பின்னர் மறுநாள் காலை வந்து பார்த்தபோது இருசக்கர வாகனத்தை காணவில்லை. யாரோ மர்மநபர்கள் திருடிச் சென்றது தெரிய வந்தது.
இது குறித்து அவர் கே.கே. நகர் காவல் நிலைய போலீசாரிடம் புகார் அளித்தார். அதன் புகாரின் பேரில் கேகே நகர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

