திருச்சி சஞ்சீவி நகரில் இன்று சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள் . தீர்வு எப்போது ?அதிமுக திருவெறும்பூர் ஒன்றிய செயலாளர் எஸ் கே டி கார்த்திக் கேள்வி
பல உயிர்களை காவு வாங்க துடிக்கும் பனையக்குறிச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலை…. சஞ்சீவி நகரில் திருவெறும்பூர் வடக்கு பகுதி மக்கள் மற்றும் தஞ்சை மாவட்டம் செல்லும் மக்கள் பயன்படுத்தி வரும் சாலையை அடைத்து பொது மக்களுக்கு வழியும் இல்லை!!… உயிர்க்கு உத்திரவாதம் இல்லை!!…
அடிமட்ட பாலம் அமைக்க பாராளுமன்ற உறுப்பினர் நிதி ஒதுக்கி அனுமதி வாங்கியதாக ஒரு விளம்பரம்!!…
திருவெறும்பூர் சட்டமன்ற உறுப்பினராக இருந்தவரும் கண்டு கொள்ளவில்லை… இருக்கிறவரும் கண்டு கொள்ளாமல் தேர்தலுக்கு மட்டும் மக்களை நாடுவதும் தேடுவதும் அவலம்…

போக்குவரத்துக்கு தீர்வு வேண்டி இன்று 10 கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

யார் ஏமாளிகள் !!?? தீர்வு எப்போது!!????
என கேட்டு உள்ளார் அதிமுக திருச்சி திருவெறும்பூர் ஒன்றிய செயலாளர் எஸ் கே டி கார்த்தி

