Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

இன்று திருச்சி சாக்சீடு நிறுவனத்தில் உலக போதை எதிர்ப்பு தின விழா

0

'- Advertisement -

இன்று வியாழன் கிழமை (25.06.2026) சாக்சீடு நிறுவனத்தில் உலக போதை எதிர்ப்பு தின விழா நடைபெற்றது.

Ad banner

டயஸ் ஒருங்கிணைப்பாளர் வரவேற்புரை ஆற்றினார்.

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் சரவணன் தலைமை தாங்கினார்.

திருச்சி வடக்கு ஸ்ரீரங்கம் காவல் உதவி ஆணையர் சீதாராமன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு போதை எதிர்ப்பு தின உறுதிமொழி ஏற்று நிகழ்வின் முக்கியத்துவம் குறித்து பேசினார்.

நிகழ்ச்சிக்கு முனைவர் அருட். சகோதரி லூர்துமேரி, பேராசிரியர் புணர்வாழ்வியல் துறை புனித சிலுவை தன்னாட்சி கல்லூரி முன்னிலையில் வகித்தார்.

TVK ad

கோட்டை காவல் ஆய்வாளர் ஜெய்சன் பிரேம் ஆனந்த் அவர்களும் கலந்து கொண்டார்.

குடி நோயிலிருந்து விடுபட்டு பல வருடங்களை கடந்து நலமுடன் வாழும் பயனாளிகளுக்கு விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

விழாவில் ஆர்.சி பள்ளி மற்றும் பொன்மலை புனித சிலுவை பெண்கள் மேல் நிலைப்பள்ளி மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. புனித சிலுவை கல்லூரி புணர்வாழ்வியல் துறை மாணவிகளின் போதையினால் ஏற்படும் தீமைகள் குறித்த விழிப்புணர்வு நாடகம் நடத்தினர்.

இந்த நிகழ்ச்சியின் அனைத்து ஏற்பாடுகளையும் நிறுவன இயக்குனர் அருட் சகோதரி. பரிமளா சேவியர் ஏற்பாடு செய்திருந்தார்.

பயனாளிகள் மற்றும் பள்ளி கல்லூரி மாணவிகள் சுமார் 200 பேர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர். ஜோசப் அவர்கள் நன்றியுரை ஆற்றினார்.

ஒருங்கிணைந்த மாற்று சிகிச்சை மறுவாழ்வு மைய ஆலோசகர்கள் ஆர்த்தி மற்றும் நல்லாங்காள் இருவரும் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்கள்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.