ஏடிஎம்மில் மீண்டும் தமிழ்.மக்கள் சக்தி இயக்கம் மற்றும் பொதுமக்கள் சார்பில் எஸ்.பி.ஐ நிர்வாகத்திற்கு நன்றி
திருச்சி பொன்மலையடிவாரம் பகுதியில் உள்ள எஸ்.பி.ஐ தானியங்கி பணம் வழங்கும் இயந்திரத்தில் சில வாரங்களுக்கு முன்பு ஆங்கிலம், ஹிந்தி, தமிழ் என மும்மொழி வசதி செயல்பாட்டில் இருந்தது. பின்னர் தமிழ் மொழி நீக்கப்பட்டு ஆங்கிலம் மற்றும் ஹிந்தி ஆகிய இருமொழிகளில் மட்டும் செயல்பட்டதால் பொதுமக்கள் அதிருப்தி தெரிவித்தனர்.

இது தொடர்பாக செய்தி வெளியானதை தொடர்ந்து, தற்போது மீண்டும் தமிழ் மொழி இணைக்கப்பட்டு ஆங்கிலம், ஹிந்தி, தமிழ் என மும்மொழி வசதியுடன் தானியங்கி இயந்திரம் செயல்பட தொடங்கியுள்ளது.
மக்கள் சக்தி இயக்கம் மற்றும் பொதுமக்கள் சார்பில் எஸ்.பி.ஐ நிர்வாகத்திற்கு நன்றி

