பொதுமக்களுக்கு தடையில்லா மின்சாரம் வழங்கும் பொருட்டு மின் பாதைகள் மற்றும் துணை மின் நிலையங்களில் மாதாந்திர முறையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவது வழக்கம். இந்த பராமரிப்பு பணிகளின் போது சம்பந்தப்பட்ட மின் பாதைகளை சேர்ந்த பகுதிகளில் மின்தடை செய்யப்படும். இந்த பராமரிப்பு பணிகள் பெரும்பாலும் விடுமுறை நாள்களில் மேற்கொள்ளப்படுவதில்லை.

திருச்சி மின் தடை பகுதிகள்
அதன்படி, நாளை (04.03.2026) புதன்கிழமை அன்று திருச்சியின் கே.சாத்தனூர் துணைமின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதன் காரணமாக பின்வரும் பகுதிகளில் நாளை காலை 09:45 மணி முதல் மதியம் 05:00 மணி வரை மின் வினியோகம் நிறுத்தப்பட உள்ளது.
அதன்படி இந்த துணை மின் நிலையத்தில் இருந்து மின் விநியோகம் பெறும் பகுதிகள் கே.சாத்தனூர், வடுகப்பட்டி, பாரிநகர், காஜாநகர், ஆர்.எஸ். புரம், T.S.N அவென்யு, குளவாய் பட்டி, ராயல் வில்லா, இ.பி. காலனி, முத்து நகா, ராணி மெய்யமை நகர், மொராய்ஸ் செட்டி,எஸ் பி ஐ ஓ பள்ளி பசுமை நகர், அந்தோனியார் கோவில் தெரு, வி.எம்.டி.ரோடு, கலைஞர் நகர், இந்திர நகர்,மொ ரைஸ் கார்டன் அம்மன் நகர், எம்ஜிஆர் நகர் மற்றும் கொட்டப்பட்டு ஒரு பகுதி.
மேலும், கே.கே. நகர், இந்தியன் பேங்க் காலனி, காஜாமலை காலனி, S.M.E.S.E. காலனி, கிருஷ்ணமூர்த்தி நகா, சுந்தர்நகர், ஐயப்பநகர், எல்.ஐ.சி. காலனி, பழனி நகர், முல்லை நகர், ஓலையூர், இச்சிகாமாலைப்பட்டி, மன்னார்புரம் ஒரு பகுதி, சிம்கோ காலனி, அகிலாண்டேஸ்வரி நகர், ஆர்.வி.எஸ்.நகர், வயர்லெஸ் ரோடு, செம்பட்டு பகுதி, குடித்தெரு, பாரதி நகர்,காமராஜ் நகர், ஜே.கே.நகர், சுந்தோஷ் நகர், ஆனந்த் நகர் ஆகிய இடங்களில் மின்சாரம் காலை 9.45 மணி முதல் மாலை 5 மணி வரை இருக்காது என மின்வாரியதுறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

