நடிகர் விஜய்க்காக முதன் முதலில் ரசிகர் மன்றம் தொடங்கிய திருச்சி ஆர் கே ராஜா தனது பிறந்த நாளை முன்னிட்டு விஜய் பெற்றோரிடம் ஆசி வாங்கினார் .
தமிழகத்திலேயே முதல் முதலாக திருச்சியில் நடிகர் விஜய்க்கு 1993 ல் இருந்து ரசிகர் மன்றம் துவங்கி 32 ஆண்டுகள் இளைய தளபதி நடிகர் விஜய் ரசிகர் மன்ற பணி மற்றும் சமூக பணி ஆற்றி வரும் சமூக சேவகர் ஆர்.கே.ராஜாவின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று தளபதி விஜய் அவர்களின் தந்தை புரட்சி இயக்குனர் அப்பா எஸ்.ஏ. சந்திரசேகர், அம்மா ஷோபா சந்திரசேகரன் ஆகியோரிடம் அவர்களது இல்லம் சென்று பிறந்தநாள் வாழ்த்து பெற்றார்.

மேலும் ஆர்.கே ராஜா அவர்களுக்கு திருச்சி மற்றும் தமிழகம் முழுவதும் உள்ள உண்மையான விஜய் ரசிகர்கள் அனைவரும் வாழ்த்து தெரிவித்தனர்