மதுரை ஆதீனம் வாகன விபத்து குறித்து சிபிஐ விசாரணை மேற்கொள்ள வேண்டும். திருச்சியில் இந்து எழுச்சிப் பேரவை மாநில தலைவர் பழ.சந்தோஷ் குமார் .
மதுரை ஆதீனம் வாகன விபத்தில் கள்ளக்குறிச்சி மாவட்ட போலீசார் முழு பூசணிக்கையை மறைப்பதாக திருச்சியில்
இந்து எழுச்சிப் பேரவை மாநில தலைவர் பழ.சந்தோஷ் குமார் புகார்.
மதுரை ஆதீனத்துடன் விபத்து நடந்த அன்று வாகனத்தில் பயணம் செய்த இந்து எழுச்சிப் பேரவை மாநில தலைவர் பழ.சந்தோஷ் குமார் நேற்று நடைபெற்ற
செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது :-
மதுரை ஆதீனம் மடாதிபதி அவர்கள் கடந்த 02.05.2025-ம் தேதி காலை சென்னைக்கு TN 64 U 4005 Fortuner என்ற பதிவெண் கொண்ட நான்கு சக்கர வாகனத்தில்
உளுந்தூர்பேட்டை ரவுண்டானம் அருகில் சீரான சாலையில் சென்று கொண்டிருக்கும் பொழுது
சேலம் டு சென்னை சாலையில் நான்குக்கு மேற்பட்ட தற்காலிக தடுப்புகள் இருந்தும் கூட மிக வேகமாக சாலையின் மையப்பகுதியில் தடுப்புகள் ஏதுமின்றி சீராக அஜீஸ் நகர் நோக்கி சென்று கொண்டிருந்த எங்களது வாகனத்தில் மிக வேகமாக வந்த கார் மோதியது. நாங்கள் இறங்கி பார்க்கும் பொழுது இரண்டு பேர் வாகனத்திலிருந்து இறங்கினர்,
இது போன்று நடந்த சம்பவத்தை உடனடியாக காவல்துறையிடம் தெரியப்படுத்தினோம்,

உளவு பிரிவு அதிகாரியிடம் தகவல் தெரியப்படுத்தினோம், காவல்துறையிடம் தகவல் தெரிந்தவுடன் அவர்கள் சம்பவ இடத்திலிருந்து உடனடியாக சென்று விட்டார்கள், அந்த வாகனத்தில் வந்தவர்கள் இரண்டு பேர் மட்டும் தான், ஆனால் உண்மைக்கு புறம்பான சம்பந்தமில்லாத பொய் செய்தியாக அதிகப்படியாக சமூகவலைதள செய்திகள் வாயிலாகவும் அறிய முடிகிறது, குருமா சன்னிதானம் அவர்கள் பொய் பேசியதாகவும்,
வாகனத்தை நாங்கள்தான் திட்டமிட்டு வேகமாக செலுத்தி நாங்கள்தான் விபத்து ஏற்படுத்தியதாகவும் உண்மைக்கு புறம்பான செய்திகளை பார்க்க முடிகிறது, ஆகவே நான் மறுப்பு அறிக்கை வெளியிடுகிறேன் விபத்து ஏற்படுத்திய உடனே காவல்துறை அவசர உதவி புகார் எண் 100 தொடர்பு கொண்டு புகார் அளிக்கப்பட்டது, உளவு பிரிவு அதிகாரியிடம் தகவல் தெரியப்படுத்தினோம், உளுந்தூர்பேட்டை காவல் உதவி ஆய்வாளர் எங்களிடம் தொடர்பு கொள்ளும்பொழுது தகவலை தெரியப்படுத்தினோம்,
மாலை உளவு பிரிவு டிஎஸ்பி விபத்து குறித்து முழுமயாக அறிந்துக்கொண்டார்,
நாங்கள் தான் காவல்துறையிடம் 15க்கும் மேற்பட்ட முறை தகவல் கொடுத்தது, நாங்கள் தகவலாக தான் தெரியப்படுத்தியிருந்தோம் ,
இது தவறு என்று காவல்துறையினர் குறிப்பிடுகிறார்கள், தொடர்ந்து மத்திய அமைச்சரின் நிகழ்வில் பங்கேற்ற குருமா சன்னிதானம் அவர்கள் என்னை கொலை செய்ய சதி நடந்து இருக்கிறது என்பதை தெரியப்படுத்தி உள்ளார், இதற்கு காரணம் காவல்துறை தான் ஏனென்றால் 15க்கு மேற்பட்ட முறை காவல்துறையிடம் தகவல் தெரிவித்தும், காவல்துறை விபத்து ஏற்படுத்தியது யார் என்று அவர்கள் சொல்வதற்கு தயங்குகிறார்கள், இடித்துச் சென்ற வாகனத்திற்கு நம்பர் பிளேட் இல்லாதது உண்மை, காவல்துறையிடம் தகவல் சொன்னதும் அவர்கள் உடனடியாக கிளம்பிவிட்டனர் அதுவும் உண்மை, வாகனத்தில் வந்தவர்கள் இரண்டு பேர் தான் நூற்றுக்கு நூறு உண்மை, ஆனால் காவல்துறை எஃப் ஐ ஆர் இல் மிகப்பெரிய பூசணிக்காயை சோற்றில் மறைப்பது போல குழந்தைகளுக்க உடல்நிலை சரியில்லை, நாங்கள் அந்த வாகனத்தில் ஐந்து பேர் குடும்பமாக வந்ததாகவும் மிக பெரிய பொய் சொல்லுகிறார்கள்,
காவல்துறை தரப்பில்
மதுரை ஆதீனம் மடாதிபதி அவர்கள்
02.05.2025-ம் தேதி காலை சென்னைக்கு TN 64 U 4005 Fortuner என்ற பதிவெண் கொண்ட நான்கு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது உளுந்தூர்பேட்டை சேலம் ரவுண்டானா அருகே மற்றொரு காரின் மீது இடித்துக்கொண்ட சம்பவம் தொடர்பாக சம்பவ இடத்திலிருந்து பொதுமக்கள் கொடுத்த தகவல் அடிப்படையில் போலீசார் சம்பவ இடத்திற்கு செல்வதற்குள் இரு தரப்பினர்களும் சென்றுவிட்டனர். சம்பவ இடத்திலிருந்த சிசிடிவி பதிவுகளை போலீசார் ஆய்வு செய்ததில் மேற்படி மதுரை ஆதீனத்தின் வாகனம் அஜிஸ் நகர் மேம்பாலத்தில் செல்வதற்கு பதிலாக அஜிஸ் நகர் பிரிவு சாலை வழியாக சேலம் ரவுண்டானா அருகே உளுந்தூர்பேட்டை மார்க்கத்தில் அதிவேகமாக வந்து கொண்டிருந்தபோது சேலத்திலிருந்து சென்னை மார்க்கமாக சேலம் ரவுண்டானா முன்பு வைக்கப்பட்டிருந்த பேரிகார்டை கடந்து மெதுவாக வந்த Maruthi Sumuld என்ற வாகனத்தின் மீது காலை சுமார் 09.45 மணியளவில் பக்கவாட்டில் உரசியதில் மேற்படி மாருதி வாகனத்தின் முன்பகுதியிலும் Fortuner வாகனத்தின் இடது பின்பக்கத்திலும் லேசான சேதம் ஏற்பட்டுள்ளது. இரு தரப்பினர்களும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு பிறகு அவர்களாகவே சுமார் 10.00 மணியளவில் அந்த இடத்திலிருந்து சென்றுவிட்டனர். இச்சம்பவம் தொடர்பாக மதுரை ஆதீனத்தை கொலை முயற்சி செய்ததாக சமூக வலைதளங்களில் செய்திகள் பரவி வருகிறது. மதுரை ஆதீனம் அவர்களே தன்னை கொல்ல முயற்சி நடப்பதாக தெரிவித்து வருகிறார். முதற்கட்ட விசாரணையில் கொலை முயற்சிக்கான சதி எதுவும் நடந்ததாக தெரியவில்லை. மேற்படி விபத்தானது முழுக்க முழுக்க மதுரை ஆதீனம் அவர்கள் பயணம் செய்த Fortuner வாகனத்தின் ஓட்டுநரின் கவனக்குறைவால் ஏற்பட்ட விபத்து எனத் தெரிகிறது. CCTV பதிவுகளை ஆய்வு செய்ததில் மதுரை ஆதீனம் அவர்கள் பயணம் செய்த வாகனம் அதிவேகமாக சென்று இவ்விபத்தினை ஏற்படுத்தியதாக தெரியவருகிறது. மேலும் இச்சம்பவம் தொடர்பாக மதுரை ஆதீனமோ அவர்களை சார்ந்தவர்களோ கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் எவ்வித புகாரும் இதுவரை கொடுக்கவில்லை பொய்யான தகவல்களை சமூக வலைத்தளங்களில் பகிரும் நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என குறிப்பிட்டுள்ளனர், எனவே மதுரை ஆதீனம் வாகன விபத்து குறித்து சிபிஐ விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று இந்து எழுச்சிப் பேரவை மாநில தலைவர் பழ.சந்தோஷ் குமார் தெரிவித்துள்ளார்.