தமிழக முதல்வர் கோட்டை மாரிஸ் தியேட்டர் மேம்பாலத்தை நேரில் ஆய்வு செய்து பணிகளை துரிதப்படுத்த உத்தரவிட வேண்டும். திருச்சி மநீம மாவட்ட செயலாளர் கிஷோர் குமார்
திருச்சி மக்கள் நீதி மய்யம் கட்சியின் தெற்கு மாவட்ட செயலாளரும் , வழக்கறிஞருமான கிஷோர் குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :-
திருச்சி வருகை தரும் தமிழக முதல்வர் கோட்டை மாரிஸ் தியேட்டர் மேம்பாலத்தை நேரில் ஆய்வு செய்து பணிகளை துரிதப்படுத்த உத்தரவிட வேண்டும்.
திராவிட முன்னேற்ற கழக அரசு பொறுப்பேற்றது முதல் திருச்சிக்கு பயன்தரும் பல்வேறு நல திட்டங்களான காவிரி மேம்பாலத்தை ரூபாய் ஆறு கோடி மதிப்பீட்டில் சீரமைத்தது, அதனருகே தற்பொழுது புது மேம்பாலம், தற்பொழுது ஒருங்கிணைந்த பேருந்து முனையம் என அடுக்கடுக்கான திட்டங்களை கொண்டு வந்தது உள்ளபடியே பாராட்டுக்குறியது. அந்த வகையில் திருச்சிக்கு வரும் தமிழக முதல்வரை மக்கள் நீதி மய்யம் கட்சியின் தெற்கு மாவட்டம் சார்பில் வருக வருக என வரவேற்கிறோம்.

மேலும் திருச்சி கிழக்கு மற்றும் மேற்கு தொகுதிகளை இணைக்கும் திருச்சி மக்கள் பெரிதும் பயன்படுத்தும் கோட்டை மாரிஸ் தியேட்டர் மேம்பாலம் பல ஆண்டுகளாக தொடர்ந்து ஆமை வேகத்தில் நடைபெற்று வருகிறது. இதனால் திருச்சி பொதுமக்கள் சொல்லொனா துயரதிற்கு ஆளாகுவதோடு, போக்குவரத்து நெரிசலால் திருச்சியே சில நேரங்களில் ஸ்தம்பிக்கிறது.
எனவே திருச்சி ஒருங்கிணைந்த பேருந்து முனையத்தை திறக்க வரும் தமிழக முதல்வர் அவர்கள் மேற்படி மாரிஸ் தியேட்டர் மேம்பால பணிகளை நேரில் ஆய்வு செய்து உரிய உத்தரவுகளை பிறப்பிக்க மக்கள் நீதி மய்யம் திருச்சி தெற்கு மாவட்டம் சார்பில் தமிழக முதல்வரை வலியுறுத்தி கேட்டுகொள்கிறோம் என வழக்கறிஞர் எஸ்.ஆர். கிஷோர்குமார்,
(செல்:98659 62927.) வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார் .