Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி: பாகிஸ்தான் மீது உடனடியாக போர் நடவடிக்கை எடுக்க கோரி முஸ்லிம் உரிமை பாதுகாப்பு கழக மாநில பொதுச் செயலாளர் இடிமுரசு இஸ்மாயில் தலைமையில் ஆர்ப்பாட்டம் .

0

'- Advertisement -

பாகிஸ்தான் மீது உடனடியாக போர் நடவடிக்கை எடுக்க கோரி

 

முஸ்லிம் உரிமை பாதுகாப்பு கழகத்தினர் திருச்சியில் நேற்று சனிக்கிழமை  ஆர்ப்பாட்டம் நடைபெற்றது .

மாநில பொதுச் செயலாளர் இடிமுரசு இஸ்மாயில் பங்கேற்பு.

 

Suresh

காஷ்மீர் பகல் காமில் 26 பேரை ஈவு இரக்கமின்றி சுட்டுக்கொன்ற பயங்கரவாதிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்,திருச்சி மாநகரில் சாலைகளில் உள்ள வேகத்தடைகளில் வெள்ளைக்கோடு அடிக்க வேண்டும்,மத்திய அரசின் வக்பு திருத்த சட்டத்தை திரும்ப பெற வேண்டும்,பாகிஸ்தான் மீது உடனடியாக போர் நடவடிக்கை எடுக்க கோரியும் முஸ்லிம் உரிமை பாதுகாப்பு கழகம் சார்பில் திருச்சி தென்னூர் அரசமரம் பஸ் ஸ்டாப் அருகில் திருச்சி மாவட்ட செயலாளர் ரபீக் ராஜா தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

 

மாநில பொதுச் செயலாளர் இடிமுரசு இஸ்மாயில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

மாநில கொள்கை பரப்புச் செயலாளர் பக்ருதீன், மாநில அமைப்பு செயலாளர் சல்மான் பக்கீர், மாநில உலமா அணித் தலைவர் சரிப் ரப்பானி, மாநில இளைஞரணி தலைவர் முஸ்தபா, மாநில இளைஞரணி செயலாளர் முகமது காசிம், மாவட்ட தலைவர் அல்லா பிச்சை, தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளர் அப்துல் சுக்கூர், புறநகர் மாவட்ட செயலாளர் முகமது இக்பால், தஞ்சை தெற்கு மாவட்ட பொருளாளர் குத்புதீன், தலைமைக் கழகச் செயலாளர் சாதிக் கான், மாவட்ட தலைவர் ஜாகீர் கான், மாவட்ட இளைஞரணி செயலாளர் மஜீத், மாவட்ட துணை செயலாளர் ஹபிப் முகமது, மாவட்ட பொருளாளர் முகமது முஸ்தபா உசேன் ,மாவட்ட பொருளாளர் சபி மாநில செயற்குழு சுஜித் அலி, மாவட்ட துணை செயலாளர் முபின் மாவட்ட இளைஞரணி தலைவர் அப்துல்லா, மாநில செயற்குழு முன்னா, இளைஞரணி ஜவகர், ஜீவா உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.