திருச்சி காந்தி மார்க்கெட்டில்
இருசக்கர வாகனத்தை திருடிய வாலிபர் கைது.

திருச்சி உக்கடை அரியமங்கலம் பகுதியை சேர்ந்தவர் சரவணன் (வயது 34 )இவர் நேற்று பால் பண்ணை மதுபான கடை அருகில் தனது இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு அருகில் உள்ள கடைக்கு சென்றார்.இந்த நிலையில் மர்ம ஆசாமி ஒருவர் இதனை நோட்டமிட்டு இருசக்கர வாகனத்தை திருடிக் கொண்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். இது தொடர்பாக சரவணன் காந்தி மார்க்கெட் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் காந்தி மார்க்கெட் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் பால் பண்ணை பகுதியில் சந்தேகத்திற்கிடமாக இரு சக்கர வாகனத்தில் சுற்றித் திரிந்த வாலிபர் ஒருவரை பிடித்து காந்தி மார்க்கெட் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் திருவெறும்பூர் பகுதியை சேர்ந்தவர் செல்லப்பா (வயது 24)என்பது தெரியவந்தது.
மேலும் இவர் தான் சரவணனின் இருசக்கர வாகனத்தை திருடி சென்றார் என தெரிய வந்தது. இதையடுத்து காந்தி மார்க்கெட் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து செல்லப்பாவை கைது செய்து அவரிடமிருந்து இரு சக்கர வாகனத்தை பறிமுதல் செய்துள்ளனர்.